தொழிலாளி

மு.முத்துச் செல்வம்

உதிரம் கொடுத்து வியர்வை குளித்து அயராது

உழைக்கும் தோழரே !

நரம்பு புடைத்து கால்கள் பொசுக்கிட்டு தொடர்ந்து

உழைக்கும் தோழரே !

வயிறு வற்றி தேகம் வெளுத்து உறுதியாய்

உழைக்கும் தோழரே !

அல்லும் பகலும் உறக்கம் விடுத்து காலந்தவறாது

உழைக்கும் தோழரே !

எத்தனை இயந்திரம் வந்தாலும் உன்போல்

ஒரு இயந்திரம் உண்டோ !

எத்தனை மென்பொருள் வந்தாலும் உன்போல்

ஒரு பரம்பொருள் உண்டோ !

நீரின்றி அமையாது உலகு –  தோழா என்றும்

உழைக்கும் நீயின்றி இயங்காது உலகு !

உழைப்பாளி உன்கை என்றும் உயரட்டும்..!

ஒடுக்குமுறைகள் யாவும் ஒவ்வொன்றாய் ஒழியட்டும்..!

.

3 comments

  1. மே தினத்திற்கு முன்பே வந்துள்ள அருமையான கவிதை

  2. உழைப்பின் உன்னதம் உணர்த்தும் கவிதை சிறப்பு!

  3. கவிதை சிறப்பு 💪

Comment here...